தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, March 24, 2011

ஒர் இரகசியம்..!

மாதம்தோறும் ரூ 3000 கோடி வருமானம் பார்க்கும் முதல்வர் குடும்பம் கேபிள் டிவியை இலவசமாக வழங்க தயாரா?

_தா.பாண்டியன்
தீக்கதிர், 24.3.11

ஒரு நாட்டின் மொழியை பேச வெட்கப்படும் உலகத்தின் ஒரே நாடு தமிழ்நாடு. தமிழைத் தொடர்ந்து பேசினால்,நம் ஆயுள் கூடும். மற்றவை பேசினால் ஆயுள் குறையும், காரணம் தமிழ் பேசுவதே பிராணாயாமப் பயிற்சி தான்!

_தேச.மங்கையர்கரசி
"குமுதம்"

Saturday, March 19, 2011

காதல் கிறுக்கன்!




"எல்லோரும் காதலிக்கிறார்கள்....

இன்னொரு நாளில் வருத்தப் படுகிறார்கள்...

சிலர் பிரிந்தற்காக...

சிலர் சேர்ந்தற்காக...! "

_"பாரதிஜிப்ரான்"




_தமிழ்க்கிறுக்கன்


♥ நட்பூ

www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

skype id: beyouths

Monday, March 14, 2011

மீடியாகாரனே அரசியலுக்கு வராதே!

சேனல் இருந்தா நியூஸ் பேப்பர் நடத்தக்கூடாது. மீடியா பவர் உள்ளவங்க அரசியலுக்கு வரக்கூடாதுன்னு வல்லரசு நாடுகளில் சட்டமே இருக்கு...



_எஸ்.ஏ.சந்திரசேகர்



தொடர்ந்து 21 நாட்கள் ஒரே காரியத்தை செய்து வந்தால், அது நம்மிடம் ஒட்டிக் கொண்டு விட முடியாத பழக்கமாக மாறி விடும்.

இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.



108 என்ற எண்ணுக்கு போன் செய்தால் அரசு ஆம்புலன்ஸ் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும். இது தான் எல்லோருக்கும் தெரியுமே என்கிறீர்களா?




ஒரு நாளில் இந்த எண்ணுக்கு வருகிற 35 ஆயிரம் அழைப்புகளில் 25 அழைப்புகள் பொய்யான தகவல்களை தரும் அழைப்புகள் என்பதால், அப்படி தகவல்களை தரும் பொய்ப்பேசிகளை கண்டிபிடித்து,தண்டிக்கப் போகிறதாம்,காவல்துறை.

அப்படி கைப்பேசிகளில் பொய்ப்பேசும் அத்தனை பேரும் குடிகாரர்களே என்கிறது, காவல் துறை.

அப்படி தண்டித்தால் தண்டிக்க வேண்டியது, குடிகாரர்களையா,
இல்லை,
குடிக்க காரணமாக இருக்கும் கலைஞரையா?

குடிகார பைய ஊர்ல திருட்டுப் பையன் நாட்டாமையாம்!

தமிழ்க்கிறுக்கனின் உள்ளம் கவிதை உள்ளம், எதைக் கண்டாலும், அதை பற்றி ஒரு கவிதையை அந்த இடத்திலேயே எடுத்து விடும் திறமைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரன்.

உன்னை, நீயே கவிஞன் என்பதை என்றைக்கு எப்படி உணர்ந்தாய்? என்று கேட்டால்...

தமிழ்க்கிறுக்கன் இப்படிச் சொல்வான் "மற்றவர்களின் கவிதைகளை படித்ததால், நானும் கவிஞனானேன், கவிஞனாக இதை விட வேறு என்ன தகுதி வேண்டும்?" என்று கேள்வி கேட்டு
நம்மையே மிரள வைப்பான்.

தன்னுடைய முதல் கவிதையை எழுதிய பிறகுதான் தான் ஒரு சாதரண கவி இல்லை,பிறவிக் கவிஞன் என்று நம்பத் தொடங்கி விட்டான்.



அவனின் கவிதையை படித்த யாரும் அதை கவிதை என்று சொல்வதில்லை என்பதால் வெறுத்துப் போய், தன்னை தானே மதிக்காதவனை எப்படி உலகம் மதிக்கும் என்று தத்துவம் பேசி அவனுக்கு அவனே பிறவிக்கவிஞன் தமிழ்க்கிறுக்கன் என்று போட்டுக் கொள்வான், அப்படி கணினியில் எழுதி என்னிடம் காட்டிய கவிதை ? யை உங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். மனசை திடப்படுத்தி படியுங்கள்!

பூகம்பம் வைத்த
தீயை...

நீர் கொண்டு
அணைத்தது
சுனாமி
பனைமர உயர அலை...

சப்பானில்
எத்தன உயிர்கள் காலி என்று கவலைப் படாதே, ராசா!

ஒலக கோப்பை கிரிக்கெட்டில் எத்தனை விக்கெட் விழுந்தது என்று
துக்கம் தொண்டையை அடைக்க
விம்மி விம்மி
விக்கி அழு ராசா,
அடுத்த தேர்தலில் நீயும் முதல்வர் தான்...

(என்ன, கவிதைய படிச்சு உங்களுக்கும் அழுவ அழுவையா வருதா? இப்படித்தான் சம்பந்த சம்பந்தமா இல்லாம எதையாவது கிறுக்கி நம்மால கிழிச்சு போட்டுறுவான்!)

_ "பிறவிக்கவிஞன்" தமிழ்க்கிறுக்கன்

www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

skype id: beyouths

Sunday, March 13, 2011

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgub3QG1hFvcqK2y5kZDNyCdVxRe6pu_vE_d1jqefr3CO_wTw1BOe6jc0lLcDCy6X47z8aqbVOH_XNtvXGy_k72r1uWDi968LqEpySS0EOMcV3VUa2AYADTw0Nxoe9IAzKyZfLGEJDj0ck/s1600/PatKalyanImage.gif






பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :

பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு

கருப்பொருள்:இயற்கை

1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
2.ஓ மல்லியக்கா ( மக்களைப் பெற்ற மகராசி 1957 )
3.வம்புமொழி ( பாண்டித்தேவன்1959 )
4.வா வா வெண்ணிலவே ( செளபாக்கியவதி 1957 )
5.கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962 )
6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 )
7.சலசல ராகத்திலே -கங்கையக்கா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
8.துணிந்தால் துன்பமில்லை ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
9.காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது )
10.வா வா சூரியனே ( பாண்டித்தேவன் 1959 )
11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )

கருப்பொருள்:சிறுவர்

12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
13.அன்புத் திருமணியே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
14.அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959 )
15.செங்கோல் நிலைக்கவே - மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959 )
16.சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958 )
17.அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958)
18.ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958 )
19.இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
20.சின்னப்பயலே...சின்னப்பயலே ( அரசிளங்குமரி 1958)
21.தூங்காதே தம்பி தூங்கதே ( நாடோடி மன்னன் 1958 )
22.திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961 )
23.ஏட்டில் படித்ததோடு இருந்துவிடுதே ( குமாரராஜா 1961 )
24.உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு )

கருப்பொருள்:குழலும் யாழும்

25.பக்கத்திலே இருப்பே ( தேடிவந்த செல்வம் 1958 )
26.வாடாத சோலை ( படித்த பெண் 1956 )
27.புது அழகை -ஆணும் பெண்ணும் ( அவள் யார் 1959 )
28.படிக்க படிக்க நெஞ்சிருக்கும் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
29.காலம் எனுமொரு ஆழக்கடலில் ( அமுதவல்லி 1959 )
30.உள்ளங்கள் ஒன்றாகி ( புனர்ஜென்மம் 1961)
31.இன்று நமதுள்ளமே ( தங்கப்பதுமை 1958 )
32.கழனி எங்கும் கதிராடும் ( திருமணம் 1958 )
33.ஆசை வைக்கிற இடந்தெரியனும் ( கலையரசி 1963 )
34.என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 )
35.அன்புமனம் கனிந்தபினனே ( ஆளுக்கொருவீடு 1960 )
36.நீயாடினால் ஊராடிடும் ( பாண்டித் தேவன் 1959 )
37.வாடிக்கை மறந்ததும் ஏனோ ( கல்யாணபரிசு 1959 )
38.நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு ( இரும்புத்திரை 1960 )
39.வருஷத்திலே ஒருநாளு தீபாவளி ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
40.ஆசையினாலே மனம் ( கல்யாணபரிசு 1959 )
41.துள்ளி துள்ளி அலைகளெல்லாம் ( தலை கொடுத்தான் தம்பி )
42.பெண்ணில்லே நீ ( ஆளுக்கொருவீடு 1960 )
43.ஆண்கள் மனமே அப்படித்தான் ( நான் வளர்த்த தங்கை )
44.மஞ்சப்பூசி பூ முடிச்சு ( செளபாக்கியவதி 1957 )
45.கன்னியூர் சாலையிலே ( பொன் விளையும் பூமி 1959 )
46.போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் -தாலி ( வீரக்கனல் 1960 )
47.அடக்கிடுவேன் ( அவள் யார் 1959 )
48.எழுந்தென்னுடன் வாராய் ( தங்கப்பதுமை 1958 )
49.ஆடைகட்டி வந்த நிலவோ ( அமுதவல்லி 1959 )
50.மானைத் தேடி மச்சான் வர ( நாடோடி மன்னன் 1958 )

கருப்பொருள்:காதல்

51.துள்ளாத மனமும் துள்ளும் ( கல்யாணபரிசு 1959 )
52.அழகு நிலாவின் பவனியிலே ( மஹேஸ்வரி 1955 )
53.உனக்காக எல்லாம் உனக்காக ( புதையல் 1957 )
54.கண்ணுக்கு நேரிலே ( அலாவுதினும் அற்புத விளக்கும் 1957 )
55.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப்பதுமை 1959 )
56.கற்பின் இலக்கணமே ( நான் வளர்த்த தங்கை 1958 )
57.எதுக்கோ இருவிழி ( செளபாக்கியவதி 1957 )
58.உன்னை நினைக்கையிலே ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
59.உன்னைக் கண்டு நானாட ( கல்யாணபரிசு 1959 )
60.ஆசை கொண்ட நெஞ்சிரண்டு ( இரும்புத்திரை 1960 )
61.மொகத்தைப் பார்த்து முறைக்காதிங்க ( விக்கிரமாதித்தன் 1962 )
62.இல்லாத அதிசயமா ( கற்புக்கரசி 1957 )
63.துடிக்கும் வாலிபமே ( மர்மவீரன் 1958 )
64.கன்னித் தீவின் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
65.வேல் வெல்லுமா ( மஹாலட்சுமி 1960 )
66.ஐயா நானாடும் நாடகம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
67.மாந்தோப்பு வீட்டுக்காரி ( இரத்தினபுரி இளவரசி 1959 )
68.பார் முழுவதுமே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
69.கண்கள் ரெண்டும் வண்டு ( அமுதவல்லி 1959 )
70.ஊரடங்கும் வேளையிலே ( ரங்கோன் ராதா 1956 )
71.சின்னக் குட்டி நாத்துனா ( அமுதவல்லி 1959 )
72.இன்ப முகம் ஒன்று ( நான் வளர்த்த தங்கை 1958 )
73.அன்பு அரும்பாகி ( தலை கொடுத்தான் தம்பி 1959 )
74.ஒன்றுபட்ட கணவனுக்கு ( தங்கப்பதுமை 1959 )
75.பறித்த கண்ணைப் பார்த்துவிட்டேன் ( தங்கப்பதுமை 1959 )
76.ஓ...சின்ன மாமா ( செளபாக்கியவதி 1957 )
77.ஓ...கோ கோ மச்சான் ( செளபாக்கியவதி 1957 )
78.சிங்கார பூங்காவில் ஆடுவோமே ( செளபாக்கியவதி 1957 )
79.என்றும் இல்லாமல் ( கலைஅரசி 1963 )
80.நினைக்கும்போது நெஞ்சம் ( கலைஅரசி 1963 )
81.கண்ணாடிப் பாத்திரத்தில் ( புனர் ஜென்மம் 1961 )
82.உருண்டோடும் நாளில் ( புனர் ஜென்மம் 1961 )
83.மருந்து விக்கிற ( தங்கப்பதுமை 1959 )
84.மச்சான் உன்னைப் பாத்து ( பாசவலை 1956 )
85.சிங்கார வேலவனே ( செளபாக்கியவதி 1957 )
86.காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் ( கல்யாணபரிசு 1959 )
87.காதலிலே தோல்வியுற்றான் கன்னியொருத்தி ( கல்யாணபரிசு 1959 )
88.மங்கையரின்றி தனியாக ( குமார ராஜா 1960 )
89.கண்ணோடு கண்ணு ( நாடோடி மன்னன் 1958 )
90.மணமகளாக வரும் ( குமார ராஜா 1960 )
91.நான் வந்து சேர்ந்த இடம் ( குமார ராஜா 1960 )
92.ஆனந்தம் இன்று ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 )

கருப்பொருள்:நகைச்சுவை

94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958)
95.மாமா மாமா பன்னாடெ ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
96.காப்பி ஒண்ணு எட்டணா ( படித்த பெண் 1956 )
97.கோபமா என்மேல் ( குல தெய்வம் 1956 )
98.கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு ( குல தெய்வம் 1956 )
99.கோழியெல்லாம் கூவையிலே ( குல தெய்வம் 1956 )
100.காயமே இது மெய்யடா ( கற்புக்கரசி 1957 )
101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 )
102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 )
103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 )

கருப்பொருள்: கதைப்பாடல்

104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 )
105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 )

கருப்பொருள்: நாடு

106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
107. துள்ளி வரப் போறேன் ( திருமணம் 1958 )
108.ஒற்றுமையில் ஓங்கிநின்ற ( மர்ம வீரன் 1958 )
109.தஞ்சமென்று வந்தவரைத் ( கலையரசி 1965 )
110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 )

கருப்பொருள்: சமூகம்

111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 )
112.வீடு நோக்கி ஓடிவந்த ( பதிபக்தி 1958 )
113.ஒரு குறையும் செய்யாம - இருக்கும் ( கண் திறந்தது 1959 )
114.உருளுது பொரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
115.ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959 )
116.பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்யன் 1962 )
117.தாயில்லை தந்தையில்ல ( ஆளுக்கொருவீடு 1960 )
118.சூதாடி மாந்தர்களின் ( உலகம் சிரிக்கிறது 1959 )
119.அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)

கருப்பொருள்: அரசியல்

121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 )
122.எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
123.படிப்பு தேவை அதோடு உழைப்பும் ( சங்கிலித் தேவன் 1960 )
124.சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் ( பாண்டித் தேவன் 1959 )
125.மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959 )
126.விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )

கருப்பொருள்: தத்துவம்

127.விதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 )
128.ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
129.கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
129.இரை போடும் மனிதருக்கே இரையாகும் ( பதிபக்தி 1958 )
130.நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 )
131.ஈடற்ற பத்தினியின் - ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 )
132.தர்மமென்பார் - இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958 )
133.உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 )
134.சூழ்ச்சியிலே - குறுக்கு வழியில் ( மகாதேவி 1957 )
135.எல்லோரும் - அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 )
136.உறங்கையிலே - பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957 )
137.இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956 )
138.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 )

கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல்

139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 )
140.பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958 )
141.கொடுமை - சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959 )
142.சின்னச் சின்ன இழை ( புதையல் 1957 )
143.டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 )
144.எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
145.என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959 )
146.நாட்டுக்குப் பொருத்தம் - விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி )
147.வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959 )
148.என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961)
149.பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959 )
150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 )
151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958)
152.நன்றிகெட்ட மனிதருக்கு ( இரும்புத் திரை 1960 )
153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
155.கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
156.குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
157.தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
158.சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960 )
159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 )

கருப்பொருள்: இறைமை

160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 )
161.ஓங்கார ரூபிநீ -அம்பிகையே ( பதிபக்தி 1958 )
162.தேவி மனம் போலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
163.அறம் காத்த தேவியே ( மஹேஸ்வரி 1955 )
164.ஊருக்கெல்லாம் ஒரே சாமி ( ஆளுக்கொரு வீடு 1960 )
165.ஓ மாதா பவானி ( செளபாக்கியவதி 1957 )
166.ஆனைமுகனே -புள்ளையாரு கோயிலுக்கு ( பாகப்பிரிவினை 1959 )
167.கண்டி கதிர்காமம் -எட்டுஜான் குச்சிக்குள்ளே ( அரசிளங்குமரி 1958)
168.அம்மா துளசி ( நான் வளர்த்த தங்கை 1958 )
169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 )

கருப்பொருள்: பொது

170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 )
171.வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957 )
172.பாசத்தால் எனையீன்ற ( அமுதவல்லி 1959 )
173.ஜிலு ஜிலுக்கும் -சிட்டுக் குருவியிவ ( அமுதவல்லி 1959 )
174.அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955 )
175.சவால் சவாலென்று ( கலைவாணன் 1959 )
176.அடியார்க்கு -அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960 )
177.மங்கையருக்கு -அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959 )
178.ஆட்டம் ( பாகப்பிரிவினை 1959 )
179.கையில வாங்கினேன் ( இரும்புத்திரை 1960 )
180.பிஞ்சு மனதில் -கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
181.ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965 )
182.ஆறறிவில் ஓரறிவு ( மகனே கேள் 1965 )
183.கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965 )
184.ஆட்டம் பொறந்தது ( மகனே கேள் 1965 )
185.மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965 )
186.லால லால- பருவம் வாடுது ( மகனே கேள் 1965 )
187.மணவரையில் -சூதாட்டம் ( மகனே கேள் 1965 )

http://karaikalkprabakaran.blogspot.com/2010/07/1.html

Tuesday, March 8, 2011

கண்ணாடி ரோஜா!

அது ஒரு மென்பொருள் பூங்கா!

அந்த கண்ணாடி மாளிகைகுள் மகளிர் கூட்டம் கல கலவென்று சிரித்தபடி, கைகால்கள் முளைத்த கலர் கலர் பூக்களாக... பூங்கொத்தைப் போல தனித் தனிக்குழுவாக நின்று கொண்டு கேமராவால் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள், அந்த குழு எதிலும் ஆண்கள் யாருமில்லை.

முழுக்க முழுக்க பெண்கள் தான்!

இன்னிக்கி "மகளிர் தினம், அதான் களை கட்டுது" என்றான் பக்கத்திலிருந்த நண்பன், உற்சாகமாக...


"அத, இவங்க எதுக்கு கொண்டாடுறாங்க?..." என்றேன் சூடாக

நண்பர்கள் சிரித்தர்கள்! யாரும் எதிர்க்க வில்லை.

மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்கிற பெண்களில் நூறு பெண்களில் பத்து பேர் கூட கஷ்டபடுகிற குடும்பத்து பெண்களாக இருக்க மாட்டார்கள்.

சும்மா பொழுது போக்க வருபவர்கள், ஆடை அணிகலன்களை அரை குறையாக அணிந்து தினம் தினம் பேஷன் ஷோ நடத்தும் பெண்கள், எப்படியும் எலலோர் வீட்டிலும் கண்டிப்பாக கார் இருக்கும். சொந்தமாக வீடு இருக்கும், பெற்றோர்கள் நல்ல சம்பளம் வாங்குகிறவர்களாக இருப்பார்கள். எல்லாம் வசதியான வீட்டு பிள்ளைகள்.


பாய் பிரண்ட் பிடிக்க, பிடித்துப் போனால் ரூம் போட, கணவனை தேர்ந்தெடுக்க, கல்யாண சந்தையில் வேலைக்கு போகிற பெண்களின் விலை அதிகம் என்பதால், கூடுதல் தகுதிக்காக வேலைக்கு வருகிறார்கள்.

இஷ்டப்பட்ட வாழ்க்கை வாழ விரும்பும் பிராணிகளுக்கு, பணம் சேர்ந்தால்...

ஆண்களுக்கு நிகராக கால் மேல் கால் போட்டு தம் அடிப்பது,தண்ணியடிப்பது, பல ஆண்களோடு படுக்கையை பகிர்ந்து கொள்வது...

மென்பொருள் நிறுவனங்களில் நடக்கிற தில்லாங்கடிகளை நேரம், எழுதுகிற சூழலும் கிடக்கும் போது விரிவாக எழுதலாம் என்றிருக்கிறேன்.

_தமிழ்க்கிறுக்கன்

Thursday, March 3, 2011

கிரிக்கெட் காமெடி!

கிரிக்கெட் காமெடி!


(தயவு செய்து கடைசி வாக்கியத்தை கண்டிப்பாக படிக்கவும்)


முதல் உலகக் கோப்பை 1975 இல் வென்ற நாடு வெஸ்ட் இண்டீஸ்

இரண்டாவது உலகக் கோப்பை 1979 இல் வென்ற நாடு வெஸ்ட் இண்டீஸ்.

மூன்றாவது உலகக் கோப்பை 1983 இல் வென்ற நாடு இந்தியா

நான்காவது உலகக் கோப்பை 1987 இல் வென்ற நாடு ஆஸ்திரேலியா

அய்ந்தாவது உலகக் கோப்பை 1992 இல் வென்ற நாடு பாகிஸ்தான்

ஆறாவது உலகக் கோப்பை 1996 இல் வென்ற நாடு இலங்கை

ஏழாவது உலகக் கோப்பை 1999 இல் வென்ற நாடு ஆஸ்திரேலியா

எட்டாவது உலகக் கோப்பை 2003 இல் வென்ற நாடு ஆஸ்திரேலியா

ஒன்பதாவது உலகக் கோப்பையை 2007 இல் வென்ற நாடு ஆஸ்திரேலியா

ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து ஒரு முறை கூட உலகக் கோப்பையை வென்றதில்லை.

_தமிழ்க்கிறுக்கன்

கிரிக்கெட் காமெடி!

அதென்ன 3g?

அதென்ன 3g?

முதலில் 1g என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

வாக்கி டாக்கி வகை தொலைபேசிகள் 1 g (generation_தலைமுறை) இந்த வகை தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் பேச, மறுமுனையில் கேட்க மட்டுமே முடியும். பேசி முடித்தவர் ஓவர் என்று தன் பேச்சை நிறுத்திக் கொண்ட பிறகே மறுமுனையில் கேட்டுக் கொண்டியிருப்பவர் பேச முடியும்.

2g ?
தற்போது பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். ஒரே சமயத்தில் இருவர் (காது கொடுத்து கேட்காமல் போனால் கூட)பேசவோ, கேட்கவோ முடியும்.



அது என்ன 3g?

புதிய தலைமுறையினருக்கான தொழில்நுட்பம். எதிர், எதிரே இருப்பவர்களை முகம் பார்த்து பேசும் வீடியோ அழைப்பு. கணினி வழியே நடக்கும் வீடியோ கான்பரன்ஸ் அழைப்பை கைப்பேசியில் கொண்டு வரும் தொழில் நுட்பம், இது.

அழைப்பை பெறுபவரும் 3g தொழில்நுட்பத்தில் இயங்குகிற கைப்பேசியை வைத்திருக்க வேண்டும்.

இரண்டு கைப்பேசிகளிலும் இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. ஏனெனில் வீடியோ இணையம் வழியாக பயணம் செய்து தான் நம் கைப்பேசியில் படமாக தெரியும்.

பிரபலமான தயாரிப்பு கைப்பேசிகளில் தான் இந்த வகை தொழில்நுட்பம் செயல்படும்.

மலிவு விலையில் விற்கப்படும் பெயர் தெரியாத கம்பெனி தயாரிப்பு கைப்பேசிகள் பெரும்பாலும் இணைய இணைப்பை பெற்று செயல்படுபவைகளாக இல்லை.

எல்லா கைப்பேசி இணைப்பை வழங்கும் நிறுவனங்களும், இன்னும் 3g தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தவில்லை.


ஏற்கனவே 3g-யை அறிமுகம் செய்தியிருக்கிற கைப்பேசி இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் இன்னும் முழுமையாக தயாராக வில்லை.

ஒரு எண்ணை தேர்வு செய்தவுடன், வரும் வசதி பிரிவில் வீடியோ அழைப்புக்கான வசதி இருக்கும்.


வேகமான இணையம் என்று இலக்கை குறி வைத்து 3g தொழில்நுட்பம் களமிறங்கியிருக்கிறது.

ஒரு நிமிட வீடியோ அழைப்புக்கு அய்ந்து ரூபாய் என்ற கட்டணத்துடன் அறிமுகப்படுத்தியிருக்கிற நிறுவனங்கள்,வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் போது குறைக்கும் என்று நம்புவோமாக!


_தமிழ்க்கிறுக்கன்

என்னைப் பற்றி ...