தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, October 20, 2011

தொடர்பு எல்லைக்கு வெளியே...!

தொடர்பு எல்லைக்கு வெளியே...!

எவ்வளவு கூட்டம்
எத்தனை இரைச்சல்
எந்த சூழ்நிலையிலும்
யாருமே கேட்க முடியாத குரலில்
மணிக்கணக்கில் பேசுவாய்...

என்னால் கேட்க மட்டுந்தான் முடியும்

என்னால் இரண்டு நிமிடத்திற்கு மேல் பேச முடிவதில்லை.

எல்லா இரைச்சல்களும்
எனக்கு இடைஞ்சலாக இருக்கும்.

எந்த சப்தமும்
என்னை பாதிக்காமல் இருந்தால் தான்
என்னால்
பேச முடியும்.

உங்களுக்கு பொய் பேசவே தெரியவில்லை
என்று திட்டுவாய்.

ஒரு நாள் உன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது...
"என் தொடர்பு எல்லைக்கு வெளியே நீ போய்விட்டதாக..." பதில் வந்தது.

அப்புறந்தான் புரிந்ததது, பெண்ணே!

எனக்கு...

உன்னை போல எனக்கு பொய் பேச தெரிய வில்லை என்று.

"பிறவிக் கவிஞன்
" _தமிழ்க்கிறுக்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...