தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, February 27, 2011

ஒரு சிலை,ஒரு இலட்சம் கொலை!

ஆந்திராவில் காங்கிரஸ் எம்எல்ஏ, எம்பிகள் ஆந்திராவை இரண்டாக்கு, தனித் தெலுங்கான வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று தன் கட்சி தலைமையின் தலைமயிரை பிடித்து ஆட்டி மிரட்டிக் கொண்டிருக்கிறது, ஆந்திரா காங்கிரஸ்.

தமிழ் நாட்டில்...?

தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கவில்லை. அப்படி கேட்டால் தமிழ்க்கிறுக்கன் ஒரு தமிழ்த்தீவிரவாதி காற்றுப் புகாத சிறையிலே பூட்டு என்பார், கலைஞர்.

என் வேண்டுகோள் எல்லாம் ஒன்றே, ஒன்று தான்!

ஒரு இலட்சம் ஈழத் தமிழர்கள் இறந்த போது, தடுத்து நிறுத்தாவிட்டால் கூண்டோடு பதவியை ராஜினமா செய்து விடுவேன், என்று உண்மையான அக்கறையோடு மிரட்டி பதவி விலகி, எப்படியாவது போரை தடுத்து இருந்தால்,தமிழினமே வரிசையில் நின்று வாழ்த்தியிருக்கும்.

திருக்குறளில் சொன்னதை கடலில் கரைத்து விட்டு, திருவள்ளுவருக்கு மட்டும் உயரமாக சிலை வைத்து, அதன் அடியிலேயே உங்கள் பெயரை எழுதி வைத்தால், நீங்கள் இறந்த பிறகும், உங்கள் பெருமைகளை பற்றி சிலைகளும் நின்று பேசும்...

என்று தப்புக் கணக்கு போடுறீங்க.

காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை ஆட்டிப் படைக்கும் காங்கிரஸ்காரன் எங்கே...

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு எத்தனை இலட்சம் உயிர் போனாலும், ஆட்சி போகாமல் பாதுகாப்பேன் என்ற உங்கள் சின்னப் புத்தி எங்கே?

தேசிய பாதுகாப்பு சட்டத்தில், ஈழத்து தமிழ்ப் போராளிகளை சிறையில் அடைத்தது தப்பு என்ற உயர்நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி, விடுதலை செய்தது.
ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?

திரும்பவும் அதே சூப்பர் பாதுகாப்பு சட்டத்தில் சீமானை சிறையில் அடைத்தீர்கள்.

திரும்பவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததது தப்பு என்று தீர்ப்பு வழங்கி விடுதலை செய்ததது, உயர்நீதி மன்றம்.

ஈழத்தில் ஒரு இலட்சம் பேரை கொல்லும் போரை சோனியா நடத்தியபோது இங்கே ஒரே ஒரு ராஜீவ் காந்தி சிலை கூட மண்ணில் சாயாமல் பார்த்துக் கொண்டீர்கள்.

தமிழைக்காக்க தண்டவாளத்தில் தலை வைத்தது எல்லாம்...

ஆட்சிக்கு வந்து பொறுக்கித் திங்க நீங்க போட்ட வீதி நாடகமா?

_தமிழ்க்கிறுக்கன்

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Saturday, February 26, 2011

ராஜபக்சே விருது!

உங்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டுமா?

மக்களின் மனசாட்சி என்ற நிகழ்ச்சியில் சென்னை (கலைஞரின் கட்சியை சேர்ந்த) மேயருடன் நேரடியாக பேசுங்கள் என்று தொலைபேசி எண்களோடு விளம்பர வாசகம் ஓடியது.

அந்த தொலைக்காட்சியின் பெயர்

"z(ee) தமிழ்"

என்னே, ஒரு அழகான தமிழ்ப் பெயர்?

கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.

மக்களுக்காக, (கலைஞரின்) மக்களே நடத்தும், மக்கள் பணத்தை கொள்ளையடித்து வளர்ந்த கலைஞரின் குடும்பத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலில் எதிலும் இந்த மாதிரி உருப்படியான நிகழ்ச்சி எதையும் ஒலிபரப்புவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஊழல் ராசா கைதான போது கலைஞர் தொலைக்காட்சியும் சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது ஓர் உண்மை வெளியானது.

கலைஞர் தொலைக்காட்சியை நடத்துவது , கலைஞர் குடும்பத்து சன் டிவி நிறுவனம் இல்லை, சாதிக் காட்சி ஒன்றின் தலைவரான நடிகர் சரத்குமார் தான் என்பது தான் அது.

தான் கதை வஜனத்தில் எழுதிய ஒரு சரித்திர கால நாடகத்தை ஒளிபரப்ப சன் டிவி நிறுவன தயாநிதிமாறனிடம் வேண்டுகோள் விடுத்தாராம்.

உங்கள் நாடகம் ஒளிபரப்பானால் சன் டிவின் ரேட்டிங் குறைந்து விடும் "போய்யா, ஒன் வேலய பாத்துக்கிட்டு..." என்ற ரீதியில் சொன்னாராம்.

அண்ணா இருந்த போது திமுக என்ற கட்சி அலுவலகமாக இருந்த அண்ணா அறிவாலயம் இன்று கலைஞரின் சொத்துக்களில் ஒன்றாக மாறியது, தனிச் சதிக் கதை.

இப்படித்தான் கலைஞரின் கோபத்தால், சன் டிவி நிறுவனம் காலி செய்யப்பட்டது.

அந்த கோபத்தின் நெருப்பில் உதயமானது தான் கொ(க)லைஞர் டீவி.

ஆளுக்கொரு குடும்ப தொலைக்காட்சி இருந்தாலும், ஈழத்தில் ஒரு இலட்சம் பேரின் படுகொலையை வெளியே தெரியாமல் மூடி மறைத்தது...

ராஜபக்சேவின் படுகொலையை விடக் கொடுமையானது!

இந்த தொலைக்காட்சிகளுக்கு சிங்கள அரசே ராஜபக்சே விருது கொடுக்கலாம்.

_தமிழ்க்கிறுக்கன்


"வேடிக்கையாகவே கேலிகள் பேசி கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Friday, February 25, 2011

வாழ்க, குடி கெடுத்த கருணாநிதி!

வரும் வழியில் அரசு நடத்தும் மதுபானக்கடையான டாஸ்மாக் வாசலில்...

பெருங்கூட்டம்!

ஆமா, டாஸ்மாக் என்ற டமில் சொல்லுக்கு இன்னா அர்த்தம்ன்னு சொல்லுங்க முத்தமிழ் தலீவரே.

வழக்கம் போல யாராவது வேட்டியை தாவணி போல தோளில் தொங்க...

கை,கால்கள் தொங்கியபடி கலைஞரின் புகழை சப்தமில்லாமல் மவுன பாடி சாக்கடையோரம் கவுந்து கெடப்பார்கள், இவர்களின் இந்த இழிசெயல் கண்டு தெரு நாயும் வெக்கப்பட்டு கொஞ்சம் தள்ளிப் போய் படுக்கும்...

கூட்டம் விலக்கி பார்த்தபோது, அதிகமாக குடித்து விட்டு, ஒரு குடிமகன் செத்தே போயிருந்தார். கூட்டத்தை கலைத்த படி காவல் துறையும் வந்து சேர்ந்தது.


டாஸ்மாக் சரக்குகள் எல்லாம் போலித் தயாரிப்பு கரும்புக் கழிவிலிருந்து போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுகிறன. மதுபானம் தயாரிக்க தேவையான சரியான பொருட்களை கொண்டு தயாரிப்பதில்லை என்கிறது ஒரு பத்திரிக்கை செய்தி!

அதாவது சுருக்கமாக சொன்னால்...

தரமான சரக்கின் விலையில் போலிச் சரக்குகள் விற்கப்படுகின்றன.

அரசே போலிச்சரக்குகளை விற்கிறது. இந்த சாதனையை பற்றி யாராவது கின்னஸூக்கு அனுப்பலாம்.


அதே டாஸ்மாக்கில் நான் பார்த்த ரெண்டாவது பிணம், இது!

108 எண்ணில் கூப்பிட்டால் வரும் இலவச ஆம்புலன்ஸ் வண்டிகளால் பல இலட்சம் உயிர்களை காப்பாற்றியதாக, அரசு தொலைக்காட்சிக்கு கூட தராமல் தன்னுடைய குடும்ப தொலைக்காட்சிகளில் வெளியிட்டு துட்டு சம்பாதித்துக் கொண்டது, கழக குடும்பம்.

ஆனால் விளம்பரமே செய்யாத செய்தி ஒன்று உண்டு . அது என்னவென்றால் ஆம்புலன்ஸில் ஏற்றி காப்பாற்றப் பட்டவர்களை விட டாஸ்மாக் சரக்கால் கொல்லப்பட்ட குடிமகன்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.

பிணங்கள் ஆட்சி நடத்துகிற

நாடு?...

சுடுகாடு!

வாழ்க குடி கொடுத்த கருணாநிதி!

வளர்க குடி கெடுத்த கருணாநிதியின் குடும்பம் !!

_தமிழ்க்கிறுக்கன்

Thursday, February 24, 2011

கலைஞர், தமிழ்க்கிறுக்கன் காமெடிங்க

என்னை வள்ளுவரோடும், தொல்காப்பியரோடும் ஒப்பிடக்கூடாது.

_கலைஞர்

உங்களை வெக்கம் பிடுங்கி திங்கிற அளவுக்கு பாராட்டி தள்றாங்க , தலீவரே !
_தமிழ்க்கிறுக்கன்.

என்னை பெரியார் தொண்டன், அண்ணாவின் தம்பி, ஏழைகளுக்கு தோழன் என்று சொல்லுங்கள்!
_கலைஞர்

வெங்காயம் விலை ஏறியிருக்கேன்னு பத்திரிக்கைகாரங்க கேட்ட "அத பெரியார் கிட்ட கேளுங்கன்னு சொல்வீங்க,ஆனா ஓட்டு மட்டும் கழக குடும்பத்துக்கு போடணும்ன்னு கூவுவீங்க, நீங்க தான் தலீவரே பெரியாருடைய உண்மையான(தொ)துண்டர் "

ஏற்கனவே எல்லோர் வீடுகளிலும் டிவி இருப்பது தெரியும் என்றாலும், திரும்பவும் டிவி கொடுப்பீங்க. அப்ப தான் உங்க குடும்பமே ஏழைகளுக்கு தோழனா இருந்து கேபிள்

டிவிங்கிற பேர்ல வீடு வீடா புகுந்து காசு வசூல் பண்ணியாவது கவுறதையா ஆட்சி போன பெறவு பொழப்பு நடத்த முடியும்.

அண்ணா, உம்மை தம்பியாக்கிது தான் ஒலகத்திலேயே பெரிய தப்பு தலீவரே!
_தமிழ்க் கிறுக்கன்

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற காமக்கடவுள் பிரேமனந்தா கல்லீரல் நோயால் மரணம்.
_பத்திரிக்கை செய்தி.

இன்னா தலீவரே ஒம் ஒடம்புல ஓரே ஒரு பூணூல் மட்டும் தொங்கியிருந்தா கதையே மாறியிருக்குமே தலீவரே!

தன்னை பெயரையே இனிமே அரசாங்க கெசட்டுல மயிலாப்பூர் எம்எல்ஏ மாத்துனால மாத்துனாலும் மாத்தூம், பதவியில இருந்து சொகம் கண்டுகிட்ட நம்ம கோமாளி நடிகர் s.v.சேகர் மாதிரி பாப்பன பிராணிங்க, பிராமண சங்கம் என்கிற பேர்ல ஜாமீன் எடுத்து வெளியில விட்டிருப்பாங்க
பெறவு திரும்பவும், பூணூலால தூண்டில் போட்டு கோவிலுக்கு வர்ற பொம்பளைங்களுக்கு புள்ள வரம் தரலாம். நீ பண்ணுன தப்புக்கு தண்டனையா உன்ன உக்கார வைச்சி பொதைக்கிறதா, கேள்விபட்டேன்.

இன்ன பண்ணுறது நீ பண்ணுன தப்புக்கு செத்தாலும், கட்டைய நீட்டி நிம்மதியா சாக முடியல.

_தமிழ்க்கிறுக்கன்

வாய்க்கரிசி அரசியல்

தமிழீழ விடுதலையை பெற்று விட்டு செத்துப் போனாள், எம் தமிழ்த் தாய் பார்வதி அம்மாள்.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளப் பாய்ந்து போனாது, கலைஞர் காலடியில் படுத்திருந்த காமெடி சிறுத்தை ஒன்று!

பொம்பளை ராஜபக்சே சோனியாவின் பிரதிநிதியாக, ராஜபக்சேவின் மனித ரத்தம் வீசும் தம்பியின் வாயால் அண்ணன் என்று அழைக்கப்பட்ட கலைஞரின் ஜெராக்ஸ் நகலாய் , கலந்து கொள்ள போயிருந்தீர்கள்.

சுருக்கமாக சொன்னால் ராஜபக்சேவின் உறவினரில் நீங்களும் ஒருத்தர் என்ற உரிமையில், துணிச்சலோடு போயிருந்தீர்கள்.

எதிரிக்கும் பிடிக்கவில்லை உங்களின் இரட்டை காகிதப் புலி வேஷம்!

நீங்கள் அடிக்கடி ஓடாத திரைப் படங்களில் நடிப்பதை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.

தயவு செய்து உங்களின் நடிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்!

அம்பேத்காரின் பெயரில், பெரியாரின் பெயரில் சாதி ஒழிப்பு என்பதற்கு பதிலாக பச்சையாக சாதிக்கட்சி நடத்தி பொழப்பை ஓட்டுவது தமிழ்நாட்டோடு இருக்கட்டும்.

உலகின் மிகப் பெரிய சுடுகாடான ஈழம் வரை, உங்களின் ஈனப் பிழைப்பைத் தொடர வேண்டாம். நீங்கள் மேடைகளில் வெடிக்கும் வெத்து வேட்டுகளை தமிழ்நாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!

பீரங்கி,தூப்பாக்கி,வெடிகுண்டுகள் வெடித்து ஓய்ந்த பூமியில் உங்கள் வெத்து வேட்டு ஓசை இனியும் தொடர வேண்டாம்!

தொல்.திருமாவளவன் அவர்களே!

இறுதியாக ஒரு வேண்டுகோள்...!

ஈழத்து பிணங்களின் வாய்க்கரிசியில், நீங்கள் அரசியல் நடத்த வேண்டாம்!

_தமிழ்க் கிறுக்கன்.

Wednesday, February 23, 2011

வாழ்க அண்ணாவுக்கு நாமம்!

கருணாநிதி வேதனை..!

தமிழர்களே! தமிழர்களே!!

வெங்காயம் ரூபாய் நூறுக்கு விற்ற போதும் கூட, வெறும் பத்து பைசா ஏன் 5 பைசாவுக்கும் கூட ,ஒரு நிமிட அழைப்பு என்று அழைப்புக் கட்டணத்தை குறைத்தவன் இல்லையா, ஆகாயம் தொட்ட ஊழல் புரட்சியாளன் தம்பி ராசா.

இந்த தேச தியாகிக்கு தெருவாக ஒவ்வொரு மொபைல் டவருக்கும் கீழே சிலை வைத்தல்லவா, கோவில் கட்டி கொண்டாடி இருக்க வேண்டும்.

அன்று தொடங்கி இன்று வரைக்கும் தியாகிகளுக்கு சிறைச்சாலை தானே ஊட்டியும் கொடைக்கானலுமாக இருந்து வந்திருக்கிறது.

தம்பி ராசா சிறையிலே படுக்க வெறும் ஏழு போர்வைகள் போர்த்தி தூங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருகிறான்.

அவனுக்கு கண்ணகி சிலைக்கு பக்கத்திலேயே என் சொந்த செலவிலாவது ஒரு சிலை வையுங்கள், எனக்கு சிலை வைக்க விட்டாலும் பரவாயில்லை.இப்படியேல்லாம் கேவலமாக ஆனந்த படுவதில் தான் என் அல்ப ஆசை ஊஞ்சலாடுகிறது.

தனியாருக்கு அலைவரிசை உரிமையை மலிவு விலைக்கு விற்று அரசாங்கத்து நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக , கிரிக்கெட் ஆடுகிறதே எதிரிக்கட்சிகள்.
உங்களுக்கு ஒன்று சொல்ல
கடமைப்பட்டிருக்கிறேன்.

அரசுக்கு சொந்தமான பொறம்போக்கு நெலத்தை வளைத்து போட்டு உங்களுக்கு சொந்தமாக்கியிருக்கிறீர்களே?

அப்போதெல்லாம் எங்கே போச்சு, உங்க புத்தி?

இவ்வளவு ஏன் என் கடசிக்காரர்களே கூட எனக்கே தெரியாமல் பொறம்போக்கு நிலத்தை வளைத்து போட்டிருக்கிறார்கள்.

இந்த விஷயம் கூட மக்களுக்கு தெரியும். பேசமால் தானே இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் கேணைகளா?

வாழ்க அண்ணாவுக்கு நாமம்!

வளர்க கழக குடும்பம்.

_தமிழ்க் கிறுக்கன்.

என்னைப் பற்றி ...