தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, April 5, 2012

கலாச்சாரம் கண் கலங்குகிறது...! பாகம்-2

இந்தியாவில் விவாகரத்தில் தமிழ்நாடு தான் முதலிடமாம்.

கள்ளக் காதலால் கொலை செய்யப் பட்ட இரத்த மையில் தான் தினசரி பத்திரிக்கைகள் எல்லாம், காலையில் அச்சாகி இரத்த வாடையோடு வெளிவருகின்றன.

விவாகரத்து என்னும் போது சாப்ட்வேர் கம்பெனி ஆசாமிகளை பற்றி எழுதாமல் எப்படி முடிப்பது?

சாப்ட்வேர் கம்பெனி ஏற்பாடு செய்து தரும் நான்கு சக்கர வண்டியில் கடைசி சீட்டு என்றாலே எல்லோருக்கும் நமட்டு சிரிப்பு கிளம்பும்.

கடைசி இருக்கையில் தான் நிறைய கல்யாணம் ஆன ஆகாத ஆண்களும் பெண்களும் தாயும், தந்தையுமாகிறார்கள்.

அப்படி மாட்டிய பெண்ணை fmg என்கிற நிர்வாக குழு விசாரித்த போது...

ஊர்ல எல்லா ஆம்பளைங்களும் பொம்பளைங்களும் பண்ணுறது தானே நாங்களும் பண்ணுறோம் உன்னால முடிஞ்சா நீ வந்து பண்ணிக்கோ என்றாளாம்.

நைட் ஷிப்டில் பெண்கள் வர தேவையில்லை என்று நிர்வாகம் அறிவித்த போது, சாக்கு போக்கு சொல்லி ஆண்கள் வராமல் பகல் ஷிப்டில் வேலைக்கு வந்தார்களாம்


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஆண்கள் பைக் ஓட்ட பின்னால் அமர்ந்து வரும் பெண்கள் துப்பட்டாவால் கண்கள் மட்டும் தெரிய மூடிய படி, முன்னால் இருக்கும் ஆணின் முதுகில் வேண்டுமென்றே பெண்களின் முன் பக்கம் பிதுங்க பிதுங்க போகும் காட்சி அங்கெல்லாம் சர்வ சாதாரணம்.

அப்படி போன ஜோடி ஒன்று நாய்களும் வெட்கப்படும் விதமாக ட்ராபிக் சிகனலுக்காக காத்திருந்த போதும் விலக வில்லை.

எல்லாம் முடிச்சிட்டு காசு கொடுக்காம ஓடிடுவான்னு தான் இப்படி டைட்டா பிடிச்சிருக்கியோ?என்றேன், நான்.

அப்புறந்தான் விலகினாள் அந்த உத்தம பத்தினி.

ஒரு நாள் என் பேஜ் புக் சாட் பக்கத்தில் வந்த நபர் சொன்னதை சொல்லி முடிக்கிறேன்.

நான் வெஸ்ட இண்டிஸ் பக்கம் அங்கேயே குடியுரிமை பெற்றவன்.

என் அம்மா சென்னை தாம்பரத்து தமிழச்சி. எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. ஆனால் நன்றாக பேசுவேன்.


எனக்கு இப்ப நாற்பது வயதிற்கு மேல் ஆகிறது. 4,5 கல்யாணங்கள் ஆச்சு.எனக்கு மகள் கூட உண்டு. அவளும், அவளோட அம்மாவும் எங்க இருங்காங்கன்னே தெரியாது.

நான் பலதடவை இந்தியா வந்துருக்கேன. இந்தியா கலாச்சாரம் உலகத்திலேயே உயர்வானது.

இந்தியா வருவேன்.ஒரு தமிழ்நாட்டு பெண்ணை மணப்பேன்.

தமிழ்நாட்டிலேயே தங்கப் போகிறேன். என் சாவு தமிழ்நாட்டு மண்ணில் தான் நிகழவேண்டும் என்றார், அந்த மனிதர்.

அந்த உருக்கமான பேச்சைக் கேட்டு நான் அழுதே விட்டேன்.

_தமிழ்க்கிறு@கன்.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...