தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, January 20, 2013

மரந்தான், மறந்தான்!

மரந்தான், மறந்தான்!

திருமண வீட்டில் மொய் செய்தவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

வீட்டில் பலா மரம் நட்டால், நட்டவர் இறந்து போவார். வீட்டில் பலா மரம் வளர்க்கக் கூடாது என்கிறார்கள் என்று நொந்தபடி புலம்பினார் நண்பர்.

எனக்கு இது என்னடா புதுக்கதையாக இருக்கிறது, என்று தோன்றியது.

எந்த மரம் நட்டாலும் சாவு மனிதனுக்கு வருவது இயற்கையானது இல்லையா?

வளர்க்க கூடாது என்றவர்களுக்கு காரணம் சொல்ல தெரியவில்லை.

எனக்கு என்ன சந்தேகம் என்றால்...

மனிதன் சுவாசிக்க தேவையான காற்றை சுத்தப் படுத்தும் மரம், செடி,கொடிகளை நடாமல் விட்டால் தானே மனிதனின் வாழ்நாள் குறுகிப் போகும்?

_தமிழ்க்கிறு@கன்சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...