தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Friday, July 1, 2011

உங்கள் ஓட்டு தமிழ்க்கிறுக்கனுக்கே..!

இங்கு முட்டை கலக்காத கேக் கிடைக்கும் என்ற அறிவிப்பு தொங்கும் மயிலாப்பூர் அய்யர் ஆத்து வீதிகளில் கடந்த பத்து நாட்களாக சுற்றித் திரிகிறேன்.

ஓர் ஆச்சர்யம் என்னை வியக்க வைத்தது!

மந்தைவெளி,மயிலாப்பூரில் எந்த புதிய பாலமும் கட்டப்பட வில்லை. ஆனாலும் போக்குவரத்து நெரிசலே இல்லாமல் வாகனங்கள் நம்மை கடந்து போகின்றன.

காரணம் எல்லாம் ஒரு வழிப் பாதை. ஊரையையே ஒரு சுற்று சுற்றி விட்டுதான் அடுத்த ஊருக்கு செல்ல முடியும். சென்னைவாசிகளுக்கு காத்திருக்கப் பிடிக்காது என்பதால் ஊரை சுற்றும் எரிச்சல் பெரிதாக தெரிவதில்லை.

நிற்க...

சென்னை திருவான்மியூரிலிருந்து புதிதாக போடப் பட்ட சாலையில் (it hyway) திருவான்மியூர் டைட்டல் தொழில் நுட்ப பூங்கா அருகில் காலை மாலை, அலுவலக நேரங்களில்


போக்குவரத்து நெரிசலில் நீந்தி கரை சேர அரை மணி நேரமாவது ஆகிப்போய்விடும். மூன்று தடவையாவது சிவப்பு சிக்னல் விழுந்து விடும்.

அந்த பகுதியில் மேம்பாலம் கட்டலாம்.

அதுவரை தற்காலிகமாக திருவான்மியூரிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, வாகனங்கள் போவது மாதிரி மட்டும் செய்து , ஒரு வழிப் பாதையாக்கினால், ஓரளவுக்கு இந்த நெரிசலை தவிர்க்கலாம்.

இந்த யோசனை எனக்கு தோன்றியதால் நானும் அடுத்த தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடலாம் என்றிருக்கிறேன்.

மறவாதீர்!
உங்கள் ஓட்டு தமிழ்க்கிறுக்கனுக்கே..!

www.thamizkkirukkan.blogspot.com/2011/07/blog-post.html




பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

1 comment:

என்னைப் பற்றி ...