தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, November 24, 2011

எம்.ஜி.ஆர் செய்த ஒரே தப்பு, ஜெ!

எம்.ஜி.ஆர் செய்த ஒரே தப்பு, ஜெ!


பஸ் கண்டக்டர் ரூபாய் 3.50 க்கு இரண்டு இரண்டு டிக்கெட் ரூ 7.00 க்கு தர 3.50 டிக்கெட் கட்டு தீர்ந்து போனதால் ஏற்கனவே இருமடங்கு கட்டணம் என்று ஈவு இரக்கம் காட்டாத நடத்துனர். இரண்டு 3 ரூபாய் டிக்கெட் கொடுத்து 6 ரூபாய் வசூலிக்காமல், இரண்டு 4ரூபாய் டிக்கெட்டுகளை வழங்கி மேலும் 1 (3+3+1=7) ரூபாய் வசூலித்து, தன்னால் முடிந்த திறமைகளை காட்டி அசத்துகிறார்கள்

மரம் வெட்டி புகழ் பாமக ராமதாஸ், தன் தலைவன் தொல்.திருமா சிறையில் அடைக்கப் பட்டால் பஸ்களுக்கு தீ வைத்து மகிழும் விடுதலைச் சிறுத்தைகள்...

இருமடங்கு பஸ் கட்டணம்,பால்,மின்சார கட்டண உயர்வு என்று தான் தோன்றித்தனமான ஜெவின் நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த போராட்டத்தையும் நடத்த தயாராக இல்லை.

பொரச்சி கலஞர் விசயகாந்த் இன்றைக்கு உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகிறராம்.

ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு மேல் உண்ணாத உண்ணா விரத போராட்டம். மூச்சு விடும் போராட்டம்.இரவில் தூங்கும் போராட்டம், பகலில் முழிக்கும்
போராட்டம் என பல போராட்டங்களை, நீங்களாவது நடத்தி அசத்துங்கள் கேப்டன்!

தமிழ்க்கி@க்கன், சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...