தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, January 15, 2012

"பொங்கல் இல்லை, தீபாவளி தான் தேசிய பண்டிகை!"

"பொங்கல் இல்லை, தீபாவளி தான் தேசிய பண்டிகை!"

தமிழ் மொழியை விட
வேறு மொழிகள் எல்லாம் எங்களுக்கு உயர்ந்தவைகள்..!

ஆங்கிலம் என்பது மொழி இல்லை, எங்களுக்கு அது தான் அறிவு.

அந்நியனின் பகலை வெளிச்சமாக்க
இங்கே இரவில் எங்கள் வாழ்க்கையை இருளாக்கிக் கொள்வோம்.

சுதந்திர தினத்தை விட
எங்களுக்கு தீபாவளி தான்
தேசிய பண்டிகை!

வருடம் முழுவதும் வைக்கோலை தின்ற மாட்டுக்கு அன்றைக்கு மட்டுந்தான் பொங்கலை ஊட்டி
அதற்கு பிறகு தான் மனிதனுக்கு பொங்கல் படைப்பான், தமிழன்.

தன்னை தோளில் சுமந்த தன் தோழன் மாட்டுக்கும், இயற்கைக்கும்
நன்றி தெரிவிக்கும், நாள் தான் பொங்கல்!

விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும்,விவசாயம் செய்வது முட்டாள்களின் வேலை என்று மாறிப் போய் விட்ட .

தமிழனின் மிச்ச சொச்ச அடையாளமான பொங்கல் தின வாழ்த்துக்கள்!

தமிழ்க்கிக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...