தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Wednesday, January 18, 2012

"சிற்பியே உன்னை...!"

தினமும் டைரி எழுதுவதால், உங்கள் மனக் கவலைகள் கொட்டி வைக்கும் கூடையாக டைரி மாறும், மனசு இலேசாகி மகிழ்ச்சியாகும்.

ஆனால் நாட்குறிப்பேடு எழுதா பழக்கமுடையோர் தங்கள் மனக் குப்பைகளை தனக்குள்ளே புதைத்துக் கொள்வதால், கவலை தின்ற பிணங்களாக நடமாடுவார்களாம்.

இதை ஓர் ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள்.

இன்னொரு நன்மையும் இருக்கிறது.

எழுத...
எழுத...

உங்களுக்குள் புதைந்து கிடைக்கும் எழுத்தாளன், வெளிவருவான்!

அதற்கு பிறகு உங்களை நீங்களே செதுக்கிக் கொண்டால்,நீங்களும் பிரபலமான எழுத்தாளர் தான்!

_தமிழ்க்கி@க்கன்,சென்னை. www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...