தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, March 25, 2012

அது!

அது!

நான் பார்த்து அதிர்ந்த அது...!

அந்த சாப்ட்வேர் நிறுவன முதலாளி இந்தியா பணக்கார வரிசையில் மூன்றாமிடத்தில் இருக்கிறான்.

சோப்பு,சீப்பு, பால்புட்டி, தண்ணீர் பாட்டில் என்று அந்த ஆசாமி வாய் வைக்காத துறையே இல்லை.

அந்த ஆசாமி நடத்துகிற சாப்ட்வேர் நிறுவன வாசலில், இரு சக்கர வாகனங்களை நிறுத்துகிற இடத்துக்கு பக்கத்தில்...

அந்த நிறுவனத்தில் பணியாற்றுகிற ஆசாமி ஒருத்தர்...

காற்றில் கியர் மாற்றி,காற்றை உதைத்து,இடப்பக்கம்,வலப்பக்கம் என்று இல்லாத ஹேண்டில் பாரை வளைத்து, வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தான்.

மனநோய் பாதிப்பை கண்டுபிடித்து, நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி மருத்துவமனையில் சேர்க்கும் போது மாலை மூன்று மணியானது.

தனிமனித சுயநலப் புலிக்கு எத்தனை பலி ஆடுகள் தான் பலி ஆவதோ?

_தமிழ்க்கிறு@கன்.

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...