தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, July 5, 2012

"நான்! "

"நான்! "

பேருந்தில் அப்படி ஒன்றும் கூட்டமில்லை. உள்ளே செல்லலாம் இடமில்லை, மனமும் இல்லை.

ஒரு நிறுத்ததில் இரண்டு வயசு பெண்கள் ஏற...

அதில் ஒரு பெண்ணை தேர்வு செய்து பின்பக்கமாக, தன் முன்பக்கம் முழுவதும் படர...

கிட்டத்தட்ட அந்த பெண்ணை கட்டிப் பிடிக்கும் வேலை ஒன்று தான் பாக்கி...

அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டிருந்தான், அவன்.

அச் செயல் அப்பட்டமாக செயற்கையாக தெரிந்தது.

அவ்வப்போது எனக்கு "சேது" தனமான கிறுக்குத்தனங்கள் தலை தூக்குவது உண்டு.

உம் பின்னால அவ்வளவு இடம் கிடக்கும் போது பொம்பள பிள்ளைங்க சூத்து பின்னால ஏன் அப்படி ஒட்டி நிக்கிறே? என்றேன்,நான்.

சுற்றியிருந்த அத்தனை பேர்களின் பார்வையும் அவனையே மொய்க்க...

உடனே அந்த பெண்ணை விட்டு பிரிந்து விலகி நிற்காமல் கொஞ்சம் நேரம் கழித்து தான் ஆண்கள் பக்கம் வந்தான்.

பஸ்ஸில இதுங்களுக்கு இதே வேலையா போச்சு என்றேன், சப்தமாக...

பேருந்து நகர்ந்து கொண்டே இருந்தது, அதற்கு பிறகு யாரும் பேசவே இல்லை..!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...