தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, February 18, 2012

ஏன்டா இப்படி காமெடி பண்ணி கொல்றீங்க?

ஏன்டா இப்படி காமெடி பண்ணி கொல்றீங்க?

(தமிழ்க்கிறுக்கனின் டைரிக் குறிப்புகள்.)

இன்றிரவு ரேடியோ மிர்ச்சி என்ற அழகு தமிழில் பெயர் வைத்த Fm வானொலியில் நடிகர் சத்யன் என்ற காமெடியன் நம்ம ராஜாசார் பத்தி , அதாங்கங்க இசை இளையராஜா பத்தி ஒரு பேட்டி வந்து கொண்டிருந்தது. நம்ம காமெடி சத்யனின் பேச்சு கேட்டு சட்டென்று சிரித்துவிட்டேன்.

நம்ம ராசா சாரை முதன்முதலாக பார்த்த போது திருப்பதி வெங்கடாசலபதியே நேர்லயே பாத்ததது மாதிரி இருந்ததாம்.

அந்த திருப்பதி வெங்கியே எவனையும் பாக்கமாட்டேன் போங்கடா லட்டு உருண்ட தலையனுங்களா ன்னு கண்ணக் கட்டி கம்முன்னு உக்காந்து கெடக்கிறாரு.

அந்த வெங்கிய எவன் பாத்தான்.ஆனா நம்ம சத்யன் ராசா சாரா பாக்கிறத்துக்கு முன்னாடியே நம்ம வெங்கிய பாத்திருக்கிறார். இந்த பாக்யம் யாருக்கு கெடக்கும். அதனால தான் வெங்கிய பாத்த மாதிரின்னு வார்த்த விட்டு வாயாடுறாரு...
ஏன் டா இப்படி காமெடி பண்ணி கொல்றீங்க?

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...