தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, February 25, 2012

"போலி"ஸ்!

"போலி"ஸ்!

ஒரு வழியாக வங்கி கொள்ளையர்களை சுட்டு காவல் துறை தன் "திறமையை" காட்டிக் கொண்டு விட்டது.

இரண்டு வங்கி கொள்ளை வரை தொடர்ந்த பிறகு டிவி,பத்திரிக்கைகளின் இலவச விளம்பரம் பார்த்து வாடகை விட்டு நே ர்மையாக பிழைப்பு நடத்துகிற ஆட்கள்...

போட்டு கொடுக்கிற ஆட்கள் இருக்கிற வரை இது மாதிரி பாராட்டுகளை காவல்துறை வெக்கமே இல்லாமல் ஏற்றுக் கொள்ளலாம்.

இனி தமிழ்நாட்டில் போலீசார் தலை நிமிர்ந்து (தொந்தி வைத்து) நடக்கலாம்.

கோடிக்கணக்கான திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. பேசாமல் இதே மாதிரி என் கவுண்டர்களை நடத்தி நிறைய பிரச்னைகளுக்கு முற்று புள்ளி வைக்கலாம்.

தங்களின் "மாமூல்" வாழ்க்கை பெரிதாக பாதிக்க தான் செய்யும்.

அதற்கு தீர்வாக ஜெ அம்மாவே, அதிரடியாக சம்பளத்தை இரண்டு மடங்காக அறிவிக்கலாம்.

பத்தாயிரம் திருடு போனால் அதை கண்டுபிடித்து தந்தால் எட்டாயிரம் சம்பளம் என்பது மாதிரியான தகவல்களை போலீஸ் ஸ்டேனுக்குள்ளேயே தகவல் பலகை வைக்க உத்தரவு போட்டு, மக்களை மிரண்டு போக செய்யலாம்.

திருடனை பிடிக்காமல் விட்டால், போலீஸ் ஆசாமிகளை கேவலமாக பேசும் அதே பொது மக்கள் தான் எந்த விசாரணையும் செய்யாமல் சுட்டுக் கொன்று செத்தவர்களுக்காக மனித உரிமை பேசும்.

சட்டங்கள் பொதுமக்களுக்கு தான் என்று நாங்கள் மீறுவோம் என்று ஆட்டம் போடுகிற காவல்துறை...

அவர்கள் தான் குற்றவாளிகள் என்று சுட்ட பிறகு ஆதாரங்களை தேடுகிற, அல்லது நாடகமாடி, போலிஸ் கட்டுகிற அத்தனை கட்டுக் கதைகளையும் பரப்புகிற வேலையை பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளும் பார்த்துக் கொள்ளும்.

மீதி நேரமெல்லாம் ஊரை, நாட்டை கொள்ளையடிக்கிற சுவிஸ் பேங்கில் திருட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சல்யூட் அடித்து காவலுக்கு நிக்கும்.

போங்கடா நீங்களும்
உங்க ...

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...