தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Wednesday, February 29, 2012

" அம்மா !"

" அம்மா !"

அம்மாவுக்கு இன்று தான் முதுகு தேய்த்து குளிக்க வைத்தேன்.

எத்தனை முறை என் தங்கம், என் பவுன், என் வெல்லக்கட்டி, என் செல்லம்... என்றெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி குளிப்பாட்டியிருப்பாள்.

வளர்ந்து இத்தனை வயதுக்கு அப்புறம் இது மாதிரி ஒரு நாளும் செய்தது இல்லை என்று நினைத்த போது குற்ற உணர்வால் கண்ணீர் சர சர வென்று கீழ் இறங்கியது.

அம்மா என் கண்ணீரை பார்க்க கூடாது.

பார்த்தால்...

காரணம் கூட கேட்காமல் அம்மாவும் அழ ஆரம்பித்து விடுவாள்.

அடிக்கடி அழுததால்...

கஷ்டபடாமல் உடனே அழுது விடுவாள்...

என் விதவை தாய்...

(மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் அம்மாவை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவு இது )

_தமிழ்க்கிறுக்கன், சென்னை.
(தமிழ்க்கிறுக்கனின் டைரிக் குறிப்பு)

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...