தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, February 25, 2012

"திருடனுக்கு போலீஸ் வேலையாம்!"

"திருடனுக்கு போலீஸ் வேலையாம்!"

சென்னையில் ஒரே மாதத்திற்குள் இரண்டு வங்கிகளை ஹிந்திக்கார ஆசாமிகள் துப்பாக்கி காட்டி கொள்ளையடித்து விட்டதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.


சென்னையில் காவலாளி வேலையில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஹிந்திக்கார ஆசாமிகளே! குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் கவலாளியாக இருப்பவர்கள் வடமாநில ஹிந்தி ஆசாமிகளே!

சின்ன சின்ன திருட்டுகள் முதல் வங்கி கொள்ளை வரை வடமாநில ஆசாமிகளின் கை வரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவிக்கிறது.

இங்கு என்னடாவென்றால் சென்னையை காவல் காக்கும் அத்தனை ஆசாமிகளும் அநத வடமாநில ஆசாமிகளாகவே இருக்கிறார்கள்!

அதாவது திருடனுக்கு போலீஸ் வேலையாம்!

ஒவ்வொரு தனிமனிதனின் உடல் உறுப்பின் ஒன்றாக மொபைல், குறிப்பாக கேமரா மொபைல் போன்கள் எல்லோரின் பாக்கெட்களையும் ஆக்கிரமித்து வருகிறது.

கொள்ளை போன இரண்டு அரசு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லையாம்.

அதைவிட பெரிய காமெடி சென்னை முழுவதும் 400 வங்கிகளில் கேமரா வசதி இல்லையாம்.

ஒரு மாதத்திற்குள் கேமரா பொருத்த வேண்டும் என்று காலக்கெடு விதித்திருக்கிறதாம்,காவற்துறை.

உடனே முடியாதாம், ஒரு மாதம் வேண்டுமாம். காலக் கொடுமை தான் போங்கள்!

இது மாதிரி அரசு நிறுவனங்கள் செயல்பட்டால் நஷ்டத்தில் தானே இயங்க வேண்டி வரும்?

இதையெல்லாம் கேக்க நாதியில்லை!

அதை எல்லாம் செய்யாமல், தமிழ்நாட்டு புரட்சித் தலைவியோ
பேருந்து கட்டணத்தை இரு மடங்காக்கினால் தமிழ்நாட்டில் எல்லா பிரச்னைகளும் சரியாகி விடும் என்று யாருக்கும் தோன்றாத வழியை கண்டுபிடிக்கிறார்.

வெண்தாடி பெரியார் இந்தி இங்கே நுழையக்கூடாது என்று தார்ச் சட்டியை கையில் பிடித்த போது...

இந்தி தெரிந்திருந்தால் இந்தியா முழுவதும் போய் பிச்சை எடுப்போம் என்ற தீச்சட்டி கோவிந்தன்கள் இனி என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரிய வில்லை.

மீண்டும் ஒரு முறை பெரியார் ஜெயித்திருக்கிறார். வேறு என்ன சொல்ல?

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...