தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, February 24, 2011

வாய்க்கரிசி அரசியல்

தமிழீழ விடுதலையை பெற்று விட்டு செத்துப் போனாள், எம் தமிழ்த் தாய் பார்வதி அம்மாள்.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளப் பாய்ந்து போனாது, கலைஞர் காலடியில் படுத்திருந்த காமெடி சிறுத்தை ஒன்று!

பொம்பளை ராஜபக்சே சோனியாவின் பிரதிநிதியாக, ராஜபக்சேவின் மனித ரத்தம் வீசும் தம்பியின் வாயால் அண்ணன் என்று அழைக்கப்பட்ட கலைஞரின் ஜெராக்ஸ் நகலாய் , கலந்து கொள்ள போயிருந்தீர்கள்.

சுருக்கமாக சொன்னால் ராஜபக்சேவின் உறவினரில் நீங்களும் ஒருத்தர் என்ற உரிமையில், துணிச்சலோடு போயிருந்தீர்கள்.

எதிரிக்கும் பிடிக்கவில்லை உங்களின் இரட்டை காகிதப் புலி வேஷம்!

நீங்கள் அடிக்கடி ஓடாத திரைப் படங்களில் நடிப்பதை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.

தயவு செய்து உங்களின் நடிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்!

அம்பேத்காரின் பெயரில், பெரியாரின் பெயரில் சாதி ஒழிப்பு என்பதற்கு பதிலாக பச்சையாக சாதிக்கட்சி நடத்தி பொழப்பை ஓட்டுவது தமிழ்நாட்டோடு இருக்கட்டும்.

உலகின் மிகப் பெரிய சுடுகாடான ஈழம் வரை, உங்களின் ஈனப் பிழைப்பைத் தொடர வேண்டாம். நீங்கள் மேடைகளில் வெடிக்கும் வெத்து வேட்டுகளை தமிழ்நாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!

பீரங்கி,தூப்பாக்கி,வெடிகுண்டுகள் வெடித்து ஓய்ந்த பூமியில் உங்கள் வெத்து வேட்டு ஓசை இனியும் தொடர வேண்டாம்!

தொல்.திருமாவளவன் அவர்களே!

இறுதியாக ஒரு வேண்டுகோள்...!

ஈழத்து பிணங்களின் வாய்க்கரிசியில், நீங்கள் அரசியல் நடத்த வேண்டாம்!

_தமிழ்க் கிறுக்கன்.

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...